President's Message
K. M. Subramanian
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
நமது சங்கத்தின் சார்பில், கடந்த கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி, பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நமது குருவும் வழிகாட்டியுமான நமது சங்கத்தின் கௌரவத் தலைவர் சக்திவேல் அண்ணா அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றும் பொழுது வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பயின்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதற்கேற்ப ஜூன் 23 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 அரசு பள்ளிகளில் பயின்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற 128 மாணவர்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 3.30 லட்சமும் கேடயமும் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ.5000, ரூ.4000, ரூ.3000 மும் 10வகுப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 மும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்த ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னால் தலைவர் திரு. ஆ. ஈஸ்வரன் அவர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நமது சங்கத்தின் இக்கல்வி பணி தொடரும்…
.இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நமது கௌரவத் தலைவர், ஏற்பாடு செய்த நமது சங்கத்தின் நிர்வாகக்குழு, நன்கொடை நல்கிய நமது உறுப்பினர்கள், மற்றும் ஒத்துழைப்பு அளித்த பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!