Tags

நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் “28 ஆம் ஆண்டு பொது குழு மகாசபை கூட்டம்” ஆகஸ்டு 24 வெள்ளிகிழமை மாலை அவினாசி பழங்கரையில் அமைந்துள்ள (IKFA ) “இந்திய நிட் ஃபேர்” அரங்கத்தில் நடந்தது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு.ராஜா எம் சண்முகம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திரு. விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் திரு. வேலுச்சாமி வரவேற்றார். பொருளாளர் திரு. மோகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 'டீ பவுண்டேசன்' சார்பில், 48 கழிப்பிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வழங்கிய நன்கொடையின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது

கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

துணை செயலாளர் திரு.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

e-max.it: your social media marketing partner